திட்டக்குடி : பேருந்து நிலையத்தில் அஞ்சலி

திட்டக்குடி : பேருந்து நிலையத்தில் அஞ்சலி
அஞ்சலி
கடலூர் மாவட்ட,திட்டகுடியில் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது விபத்தில் உயிரிழந்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம்-வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகியோர் திருவுருவப் படத்திற்கு திட்டக்குடி பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செய்தியாளர் சீலா தலைமையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு முன்னால் மாவட்ட செய்தியாளர் தயா. தமிழன்பன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் ஜான் செங்குட்டுவன், மாவட்ட அமைப்பாளர் அங்கனூர் சக்திவேல், ஒன்றிய துணை செயலாளர் அர்ஜுனன், த. உ. மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், கிளை செயலாளர் செவ்வேரி செங்கமலம், உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story