திருச்சி : 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி : 2  நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பைல் படம் 

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட் சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலைய, நீர்ப்பணி நிலையத்தில் பராமரிப்பு பணி 12.02.2024 மற்றும் 13.02.2024 ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், காஜாப் பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், கல்லாங்காடு, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், மிளகுபாறை மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளிலும், 13.02.2024 மற்றும் 14.02.2024 இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. 15.02.2024 முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரால் கேட்டுக் கொள்ளபடுகிறது.

Tags

Next Story