திருச்சி : பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி 53வது வார்டு பீமநகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருச்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 53வது வார்டு பீமநகர் ரேஷன் கடையில் அமைச்சர் கே.என்.நேரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், பழனியாண்ட்டி, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மண்டல குழு தலைவர் துர்காதேவி, 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெ. கலைச்செல்வி, திமுக வட்ட செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story