மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

மழை வேண்டி இஸ்லாமியா்கள்  சிறப்புத் தொழுகை

சிறப்பு தொழுகை 

கத்திரி வெயிலில் இருந்து மக்களைக் காக்கவும், மழை பெய்து பூமியைக் குளிரச் செய்யும் வேண்டுதலுடன் இஸ்லாமியா்கள் திருச்சியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் பாலக்கரை பிரபாத் திடலில் நடைபெற்ற தொழுகையை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி தலைமையேற்று நடத்தினாா். இதில், உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இத்தகைய தொழுகையை நடத்தினால் நிச்சயம் மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் கைகளை ஏந்தி இறைவனிடம் துவா கேட்டு வழிபாடு செய்தனா். பலா் கண்ணீா் மல்க வேண்டிக் கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story