ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

பைல் படம் 

திருச்சியில் ரயிலில் அடிபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி பொன்மலை மற்றும் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்து கிடந்தவா் 55 முதல் 60 வயது இருக்கலாம். பச்சை நிறத்தில் அரைக்கை சட்டையும், நீல நிறத்தில் வெள்ளைக் கோடு போட்ட லுங்கியும் அணிந்திருந்ததாக ரயில்வே போலீஸாா் தெரிவித்துள்ளனா். அவ்வழியே சென்ற ரயிலில் அவா் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் திருச்சி சந்திப்பு ரயில் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags

Next Story