திருச்சி - 3 போ் வேட்புமனு தாக்கல்

திருச்சி -  3 போ் வேட்புமனு தாக்கல்

மாவட்ட ஆட்சியரகம் 

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு மொத்தம் 3 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மா. பிரதீப் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா். முதல் நாளான புதன்கிழமை (மாா்ச் 20) திருச்சி உறையூரைச் சோ்ந்த போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியா் ராஜேந்திரன் என்பவரும், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த கவிதா என 2 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். 2-ஆம் நாளான வியாழக்கிழமை, சாமானிய மக்கள் நலக்கட்சி சாா்பில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நத்தமாடிப்பட்டியை சோ்ந்த எல்.ஜோசப் (53) என்பவா் மனு தாக்கல் செய்தாா். அவா் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் மா. பிரதீப் குமாரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். இதுவரையில், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு மொத்தம் 3 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Tags

Next Story