திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் இம்மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் வேட்பாளர்கள் நியமித்து அவர்களுக்கு சின்னமும் வழங்கப்பட்டு நேற்று முதல் சூறாவளி பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்கு சேகரித்தார்.

முன்னதாக வாக்கு சேகரிப்பு இடத்திற்கு வந்த கருப்பையாவிற்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து ஆரவாரம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பின்னர் பொதுமக்களிடம் பேசுகையில் ,உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்திருக்கின்றேன் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.

மேலும் நான் வெற்றி பெற்ற பிறகு இப்பகுதிக்கு தேவையான சாலைகள் இடுகாட்டுக்குச் செல்லும் சாலை ஆகியவை அமைத்து தரப்படும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். மேலும் நான் இந்த பகுதியை சேர்ந்தவன் என்பதால் நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து அண்டகுளம், கூகூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வாக்க கேட்டு பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story