திருச்சியில் திமுக சார்பில் திருச்சி சிவா பிரச்சாரம்

திருச்சியில் திமுக சார்பில் திருச்சி சிவா பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது ஒரு காலத்தில் நம்முடைய நாட்டில் தேர்தல் வருகிற போது வாக்களிக்கிற உரிமை எல்லோருக்கும் கிடையாது.இப்போது தேர்தலில் 18 வயதான எல்லோரும் வாக்களிக்கிறீர்கள் அப்போது சொத்து வரி,வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது நாடு விடுதலை அடைந்து அரசியல் சட்டத்தை 1950 ல் முடிவெடுக்கின்ற நேரத்தில் அண்ணல் அம்பேத்கர் ,பண்டித நேரு ஒரு யோசனை சொன்னார்கள். இனிமேல் இந்த நிலை வேண்டாம் ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லாமல் இருக்க 21 வயதான எல்லோருக்கும் ஓட்டுரிமை என்றார். அப்போது அந்தக் கட்சியிலே சில பேர் எதிர்த்தார்கள். ஏழைகளிடம், படிப்பறிவு இல்லாத பாமரர்களிடம், நாடாளுகின்ற அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தராதீர்கள் அவர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் பலவீனங்களுக்கு ஆட்படுவார்கள் தவறான அரசாங்கங்கள் வர நேரிடும் . என கூறிய போதுபண்டித நேருவும்,அம்பேத்கரும் கூறியது எந்த ஏழை கொடுக்கின்ற வரிப்பணத்தில் இந்த நாட்டு அரசாங்கம் நடக்கிறதோ இந்த ஏழையின் வீட்டு வாசலில் நீயும் நானும் ஓட்டு கேட்பதற்காகவாவது போய் நின்றாக வேண்டும் என்று கூறினார். முத்தலாக் செல்லாது என்றதோடு முஸ்லிம்களை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவரப்பட்டது என பேசிய திருச்சி சிவா வருகின்ற தேர்தலில் அருண் நேருவிற்க்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story