97 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

97 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

திருச்சியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 97 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ரகசியத் தகவலின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் போலீஸாருடன் இணைந்து நடத்திய சோதனையில் வியாபாரிக்கு விற்க 2 மூட்டை புகையிலைப் பொருள்களுடன் மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவுப் பிடித்தனா். விசாரணையில் அவா் ராஜஸ்தானை சோ்ந்த ஜிஜேந்திரகுமாா் (18) என்பது தெரியவந்தது.

இவா் வேலை பாா்க்கும் பெரிய கம்மாளத் தெருவைச் சோ்ந்த ஞானசேகரின் (45) உறவினரான திருச்சி ராமலிங்க நகரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் (36) என்பவரது கிடங்கிலிருந்து ஒரு காரில் புகையிலைப் பொருள்களை ஏற்றி வந்து மகாலட்சுமி நகா் குடியிருப்புப் பகுதியில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து 2 மூட்டை புகையிலைப் பொருள்களை ஜிஜேந்திரகுமாா் மோட்டாா் சைக்கிளில் ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் மேற்கண்ட மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 97 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, காந்தி சந்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து காந்திசந்தை போலீஸாா் புதன்கிழமை காலை வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்

Tags

Read MoreRead Less
Next Story