பைக் மீது உரசியது லாரி கணவர் பலி: மனைவி காயம்!

பைக் மீது உரசியது லாரி கணவர் பலி: மனைவி காயம்!

விபத்து

பைக் மீது உரசியது லாரி கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயம் அடைந்தனர்.
கறம்பக்குடி தாலுகா அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(50). இவரது மனைவி செல்லம்மாள்(40). நேற்று காலை இருவ ரும் கறம்பக்குடியில் இருந்து பைக்கில் கலியராயன் விடுதிக்கு சென்றனர். கறம்பக்குடி செட்டித்தெரு முக்கம் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த லாரியின் பின்பக்க டயர் பைக் மீது உரசியதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பாஸ்கர் அதே இடத்தில் உயிரிழந்தார். செல் லம்மாள் படுகாயத்துடன் புதுகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் ராஜகோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story