அரவக்குறிச்சி அருகே பைக் மீது லாரி மோதல்: வாலிபர் படுகாயம்

அரவக்குறிச்சி அருகே பைக் மீது லாரி மோதல்: வாலிபர் படுகாயம்

காவல் நிலையம்

அரவக்குறிச்சி அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, முத்து நகர், 5-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் ராம்பிரசாத் வயது 30. இவர் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7:15- மணி அளவில், கரடிப்பட்டியில் இருந்து கொத்தப்பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் அரவக்குறிச்சி பிச்சமுத்து தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று,ராம்பிரசாத் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது.

இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த ராம்பிரசாத்துக்கு தலை, மார்பு,இடது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள கொங்கு நாடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ராம்பிரசாத்தின் சகோதரர் நாகராஜ் வயது 24 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ராம்பிரசாத் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு,

நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத லாரி எது? அதை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags

Next Story