தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் கனிமவள லாரி மோதி விபத்து

தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில்  கனிமவள லாரி மோதி விபத்து

கல்லுவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் கனிம வள லாரி மோதி விபத்து உண்டானது. 

கல்லுவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் கனிம வள லாரி மோதி விபத்து உண்டானது.

கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

.இந்த கனிம வளம் ஏற்றி செல்லும் லாரிகளால் தினந்தோறும் கனிமவள லாரிகளால் விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கனிமவள லாரி முளகுமூடு அருகே கல்லுவிளை பகுதியில் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் இல்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story