நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

காவல் நிலையம்

தொட்டியம் அருகே நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளனது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் வயது 37. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மே 2-ம் தேதி மாலை 7 மணி அளவில், கரூர்- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் இவரது லாரியில் சென்று கொண்டிருந்தார்.

இவரது லாரி ஈசநத்தம் பிரிவு அருகே வந்த போது, அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த அடையாளம் தெரியாத 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது தர்மராஜ் ஓட்டிய லாரி மோதி விபத்து ஏற்பட்டு,

அந்த நபருக்கு முன் நெற்றி மற்றும் உதடுகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த அருகில் உள்ள தெத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி, காயமடைந்தவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.

எனவே, சம்பவம் குறித்து ராஜேஸ்வரி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அந்த நபரின் உடலை அடையாளம் காண்பதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, விபத்து ஏற்பட காரணமான லாரி டிரைவர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story