லாரியின் கண்ணாடி உடைப்பு: காவல்துறையினர் விசாரணை

லாரியின் கண்ணாடி உடைப்பு: காவல்துறையினர் விசாரணை

காவல் நிலையம் 

பாலக்கோடு சாலையில் வழிவிடாமல் சென்ற லாரி ஓட்டுனரிடம் தகராறு செய்து லாரியின் கண்ணாடி உடைப்பு காவல்துறையினர் விசாரணை

பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து லாரி டிரைவர். இவர் கரும்பு பாரம் ஏற்றி வருவதற்காக பாலக்கோட்டில் இருந்து பேகார அள்ளிக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார்.

கரகதஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் மொபட்டில் வந்த கரகதஅள்ளியை சேர்ந்த தனசேகரன் என்பவர் மொபட்டை லாரியின் முன்னே சென்று குறுக்கே நிறுத்திவிட்டு ஹாரன் அடித்தாலும் வழிவிட மாட்டாயா என தகாத வார்த்தையால் திட்டியதுடன் அருகில் கிடந்த கல்லை எடுத்துலாரி கண்ணாடியில் எறிந்தார்.

இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து தனசேகரன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மாரிமுத்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story