ஶ்ரீபெரும்புதூரில் வரிசைகட்டி நிற்கும் லாரிகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஶ்ரீபெரும்புதூரில் வரிசைகட்டி நிற்கும் லாரிகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வரிசை கட்டி நிற்கும் லாரிகள்

ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வரும் லாரிகள் மற்றும் கன்டெய்னர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையோரம் வரிசைகட்டி நிற்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வரும் லாரிகள் மற்றும் கன்டெய்னர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையோரம் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தவிர, இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, பொது போக்குவரத்திற்கு இடையூறாகவும்,

விபத்துகளை ஏற்படுத்தும் விதமாகவும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சாலையோரமாக லாரிகள் நிறுத்த அனுமதிக்கக் கூடாது என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags

Next Story