மஞ்சளுக்கு கிடைத்தது ரூ.13299... விவசாயிகள் மகிழ்ச்சி !

மஞ்சளுக்கு கிடைத்தது ரூ.13299... விவசாயிகள் மகிழ்ச்சி !

மஞ்சளுக்கு கிடைத்தது ரூ.13299... விவசாயிகள் மகிழ்ச்சி !

ஒழுங்கு முறை விற்பனைகூடத்தில் மஞ்சள் ரூ.13,299 வரை விலை கிடைப்பதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விளைவிக்கப்பட்டு, இங்குள்ள 4 ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் மஞ்சள் வளாகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 1,807 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில், 812 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் ரூ. 8,739 முதல் ரூ. 13299 வரையிலும், கிழங்கு ரூ. 8,244 முதல் ரூ. 11,939 வரையிலும் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story