நலத்திட்ட உதவிகளை வழங்கிய த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த்

ராசிபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராசிபுரத்திற்கு வருகை தந்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் புதியதாக கட்டப்பட்ட தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் தளபதி விஜய் பயிலகம், தளபதி விஜய் கணினியகம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்து அப்போது மாணவ -மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவியருக்கு பொருட்களை வழங்கினார்.

ராசிபுரம் விருந்தகத்தின் 3-ம் ஆண்டினை தொடங்கி வைத்து சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பொது மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ராசிபுரம் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து தங்க நாணயத்துடன் சீர்வரிசை வழங்கி விருந்து உபசரிப்பு வழங்கினார். தொடர்ந்து விலையில்லா விருந்தகத்திற்கு உதவிகள் வழங்கிய மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரபு, பாக்கியராஜ், விக்கி, மேலும் ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர். இன்று ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள என் எஸ் ஆர் ரம்யவர்ஷினி திருமண மண்டபத்தில், நடக்கும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

Tags

Next Story