தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பம் களவாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பம் களவாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

சாலை மறியல் 

அப்பிநாயக்கன்பட்டி ஜங்ஷன் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பம் களவாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பிநாயக்கன்பட்டி ஜங்ஷன் பகுதியில் திருப்பத்தூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கட்சி கொடி கம்பம் நடப்பட்டிருந்தது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காரணத்தினால் கொடி இல்லாமல் வெறும் கம்பம் மட்டுமே இருந்துள்ளது.

இந்தப் பகுதியில் மர்ம நபர்கள் கொடிக்கம்பத்தை திருடி சென்றதால் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த கொடி கம்பத்தை திருடி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் நெப்போலியன் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட து செயலாளர் விமல்குமார் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் குமார், தாஸ், நித்யகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story