தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெகவினர் நலத்திட்ட உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெகவினர் நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி வழங்கல் 

கீழதண்ணிலபாடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாகை மாவட்டம் கீழதண்ணிலபாடியில் கடந்த 9,ம் தேதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழை கூலி தொழிலாளர்கள் வசித்து வந்த 8, வீடுகள் தீயில் முற்றிலும் கருகி நாசமாயின. இதில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர் எரிந்து போன வீட்டில் தற்போது தார்பாயை போர்த்தி குடியிருந்து வருகின்றனர். இதையறிந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் நாகை மாவட்டம் கீழதண்ணிலபாடி கிராமத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது தார்ப்பாய் கொண்டு குடியிருந்து வரும் தண்ணிலபாடி கிராமத்தைச் சேர்ந்த சேகர், மாரியப்பன், முருகையன், சந்தானம் உள்ளிட்ட 8 குடும்பத்தினருக்கு, தமிழக வெற்றி கழக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன், தென்னங்கீற்று, அரிசி, பாய், குடம் மற்றும் மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தற்போது வெளுத்து வாங்கும் வெயிலுக்கு தார்ப்பாயில் பாதிக்கப்பட்ட மக்கள் குழந்தைகளுடன் வசிப்பது வேதனையானது என்பதை அறிந்து தற்காலிக தீர்வாக நிழலுக்கு தென்னங்கீற்று வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர், தீ விபத்தினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டி தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story