பிரேத பரிசோதனையில் திருப்பம்; தாயை தாக்கிய மகன் கைது

பிரேத பரிசோதனையில் திருப்பம்; தாயை தாக்கிய மகன் கைது

  பென்னாகரம் அருகே மகன் தாக்கியதில் தாய் இறந்ததாக போஸ்ட்மார்ட்டத்தில் தெரிய வந்ததால், போலீசார் மகனை கைது செய்தனர்.

பென்னாகரம் அருகே மகன் தாக்கியதில் தாய் இறந்ததாக போஸ்ட்மார்ட்டத்தில் தெரிய வந்ததால், போலீசார் மகனை கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளுவாடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி லட்சுமி இவர்களது மகன் பாலாஜி,இவருக்கு மது குடிக்கும்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டகுடும்ப தகராறு காரணமாக சரண்யா, குழந்தைகளுடன் மறு மாங்கரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட் டார்.

இதனால் பாலாஜிகூலி வேலைக்கு செல்லாமல் தாயார் லட்சுமியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் லட்சுமி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது தான் தவறி விழுந்து விட்டதாக லட்சுமி உறவினர்களிடம் கூறினார். இதனிடையே சில நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசார் லட்சுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் திருப்பமாக லட்சுமி இடுப்பு, வயிறு பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டதால் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து, பென்னாகரம் போலீசார், இந்த வழக்கை விசாரணை நடத்தினர். அப்போது பாலாஜி தனது தாயாரை தாக்கி காலால் எட்டி உதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் போலீசார் கொலை வழக்காக மாற்றி பாலாஜியை கைது செய்தனர்.

Tags

Next Story