தேசியநெடுஞ்சாலையில் தனித்தனி விபத்தில் 4 வாகனங்கள் மோதல்

தேசியநெடுஞ்சாலையில் தனித்தனி விபத்தில் 4 வாகனங்கள் மோதல்

விபத்து 

திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமம் பஸ் ஸ்டாப்பில் தனியார் கல்லூரி பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. அப்போது பின்னால் சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் எதிர்பாரதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

அதுபோல் சென்னையில் இருந்து அரசு பஸ் ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது.திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரிக்கம்பட்டு கிராமம் சந்திப்பில் வந்தபோது திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையை தாண்டி அரசு பஸ்மீது மோதியது. இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த 2 விபத்துகள் குறித்தும் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story