நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய இருவர் கைது

நிலக்கோட்டை அருகே கே.குரும்பப்பட்டி பகுதியில் நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிலக்கோட்டை அருகே கே.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி லதா. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் பெரியசாமி என்பவருக்கும் நிலம் தொடர்பாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் பெரியசாமி அவரது தந்தை பிச்சைமுத்து உறவினர்கள் சுதா, சுந்தராம்பாள் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு லதாவை தாக்கினர். இதனை தடுக்க வந்த லதாவின் தந்தை அழகர் மற்றும் சின்னமாளையும் தாக்கினர்.

இதில் காயமடைந்த அவர்கள் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து லதா நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி பிச்சை முத்து ஆகியோரை கைது செய்து நிலக்கோட்டை நீதிபதி நல்ல கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இரண்டு பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி நல்ல கண்ணன் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக சுதா சுந்தராம்பாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story