முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்குதலில் இருவர் கைது !

முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்குதலில் இருவர் கைது !

கைது

சேலத்தில் முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யபட்டார்கள்.

சேலம் கருங்கல்பட்டி 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தாதகாப்பட்டி நாகாத்தம்மன் கோவில் அருகே பூபாலன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர்களுக்கும், பூபாலனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் பூபாலனை தாக்கினார்களாம். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபரை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (49), அவருடைய மகன் விஜய் கார்த்திக் (22) ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story