பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

கிருங்காக்கோட்டை பெட்ரோல் பங்க் சூப்பர்வைசரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், பெரும்பச்சேரியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி மல்லிகா. இவர் மானாமதுரை அருகே உள்ள கிருங்காக்கோட்டை பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலுரை சேர்ந்த நல்லுசாமி மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர், பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் ரூபாய் 1000 பணம் பறித்து சென்றதாக கூறப்படும் நிலையில் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து 12-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story