மேக்கரை காலணி அருகே சூதாடிய இருவர் கைது.

மேக்கரை காலணி அருகே சூதாடிய இருவர் கைது.

காவல் நிலையம் 

மேக்கரை காலணி அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மேக்கரை காலனி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருப்பதிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 30 ம் தேதி மேக்கரை காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மேக்கரை காலனி பகுதியைச் சேர்ந்த ராமசாமி, சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.100 பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

Tags

Next Story