பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

சூதாட்டம் 

தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தென்னிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க் பின்புறத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி 29, கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, கோடந்தூர் பகுதியைச் சேர்ந்த குமார் 40 ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story