எல்ல மேட்டுப்புதூர் காலனியில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

எல்ல மேட்டுப்புதூர் காலனியில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
எல்ல மேட்டுப்புதூர் காலனியில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லமேட்டு புதூர் காலனி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருப்பதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் எல்லமேட்டுபுதூர் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகே, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த அன்பு சந்திரன் வயது 30, அரவக்குறிச்சி தாலுக்கா சூடாமணி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி வயது 63 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 100-ஐ பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

Tags

Next Story