கோவிலில் கொள்ளையடித்த இருவர் கைது

கோவிலில் கொள்ளையடித்த இருவர் கைது
கைது
மறைமலைநகர் அருகே திருத்தேரி தேவி கருமாரியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் குத்து விளக்குகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த, திருத்தேரி பகத்சிங் நகரில் பழமையான ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி வழக்கம்போல் இரவு பூஜைகள் முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை 5 மணிக்கு கோவில் பணியாளர் செல்வா, கோவிலை சுத்தம் செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை மற்றும் 11 கிலோ காமாட்சி அம்மன் பித்தளை குத்துவிளக்கு திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவிலுக்கு வந்த மறைமலைநகர் போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை கைது செய்து குத்து விளக்கை பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக்கின் கூட்டாளியான மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (37) என்பவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story