மது போதையில் நண்பரை கொலை செய்த இருவர் கைது

மது போதையில் நண்பரை கொலை செய்த இருவர் கைது
தென்காசி அருகே மது போதையில் நண்பரை கொலை செய்த இருவர் கைது
தென்காசி மாவட்டம், பூலாங்குடியிருப்பு பகுதியில் மதுபோதையில் நண்பரை கொலை செய்த இருவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் உதயன் (வயது 50). இவர் கேரள மாநிலம் பத்தனாபுரம் பகுதியைச் சார்ந்தவர். நேற்று முன் தினம் இந்தத் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தோட்ட காவலாளி உதயன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி உடனடியாக புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் உதயனின் நண்பர்களான குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியைச் சார்ந்த சஞ்சய் (வயது 23), மாரியப்பன் (வயது40) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சஞ்சய், மாரியப்பன், உதயன் ஆகிய மூவரும் நள்ளிரவு வரை ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வல்லம் சஞ்சய் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து உதயனை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிவித்தனர். நேற்று போலீசார் இருவரையும் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி சுனில் ராஜா அந்த இருவரை யும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார்.

Tags

Next Story