உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

மதுரையில் உரிமம் இன்றி துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த பைனான்சியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உரிமம் இன்றி துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த பைனான்சியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உரிமம் இன்றி துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த பைனான்சியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை சுப்பிரமணியபுரம் எஸ்.ஐ., கார்த்திக் ரகுநாத் தலைமையில் முத்துப்பட்டி கண்மாய் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் டூவீலரில் வந்தவரை நிறுத்த முயன்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயன்றார்.அவரை விரட்டி பிடித்தத போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்ததால், அவரது டூவீலரை சோதனையிட்டனர். அதன் இருக்கைக்கு அடியில் 'இ.கே.ஓ.எல்., பைரட் மேக்னம்' என்று எழுதியிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி இருந்தது.

25 தோட்டாக்களும் வைத்திருந்தார். அதற்கான உரிமம் இல்லை.விசாரணையில், 'ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு ராஜ்குரு மகன் வீரபாண்டி 28, எனவும், பைனான்சியரான அவருக்கு, பணம் கொடுக்கல் வாங்கலின்போது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள மதிச்சியம் திவாகர் மூலம் திண்டுக்கல் தினேஷிடம் இந்த உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள் வாங்கியதும் தெரியவந்தது.இதையடுத்து வீரபாண்டி, திவாகரை போலீசார் கைது செய்து துப்பாக்கி, ரூ.1.29 லட்சம், தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணை நடக்கிறது.

Tags

Next Story