அரசு அனுமதியின்றி மது விற்றதாக இருவர் கைது

அரசு அனுமதியின்றி மது விற்றதாக இருவர் கைது

மதுபாட்டில்கள் 

குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதிஇல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எட்டுக்கள் ராம்குமார், உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடை எதிரில் உள்ள கேண்டீனில் மது விற்பதாக தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் கையும் களவுமாக பிடித்து, மது விற்ற கூலி தொழிலாளி மாதேஸ்வரன், 52, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story