கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது - 20 லிட்டர் பறிமுதல்

கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது - 20 லிட்டர் பறிமுதல்

காவல் நிலையம் 

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கூட்ரோடில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கல்வராயன்மலை வில்வத்தியை சேர்ந்த மணிகண்டன் 30,பழையசிறுவங்கூர் அய்யனார் 45; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்து கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags

Next Story