கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தில் 1.800 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வில்லியம்பாக்கம் ஜங்ஷனில் சோதனை நடத்திய போலீசார், அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த மேல்மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாய்கிருஷ்ணன், 24, ரிஷிகுமார், 20, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், 1.800 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story