கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

திருப்பூர் கூலிபாளையம் அருகே கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கூலிப்பாளையம் பகுதியில் அணுப்பர்பாளையம் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பார்த்த என்கிற சிரஞ்சீவி (வயது 27) என்பது தெரியவந்தது மேலும் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து அணுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பி. என். ரோடு கூத்தம்பாளையம் காமராஜர் பகுதியில் கஞ்சா விற்றதாக ஷாருக்கான் (21) என்பவரை திருமுருகன் பூண்டி போலிசார் கைது செய்தனர்.இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story