கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


சிங்கப்பெருமாள் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் மறைமலைநகர் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்நேரம், போலீசாரை கண்டு, இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதில் கீழே விழுந்து காயம் காயமடைந்தார். அந்த நபரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த கபாலி, 30. என்பதும், இரண்டு கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் சிறையில் அடைத்தனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கூட்டு சாலையில் செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அனுசுயா மனோகரி தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக யமஹா பைக்கில் வந்த இளைஞரை மடக்கி சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்த விஜய், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story