குள்ளஞ்சாவடி: குட்கா விற்ற இருவர் கைது

குள்ளஞ்சாவடி: குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்பனை செய்தவர் கைது

கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் துறையினர் மதன கோபாலபுரம், கோரணப்பட்டு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள 2 பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து மதன கோபாலபுரத்தை சேர்ந்த மஞ்சுளா, கோரணப்பட்டு விஜயா என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story