புகையிலைப் பொருள்கள் விற்ற இருவர் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவர் கைது
புளியங்குடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது
புளியங்குடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகேயுள்ள தன்னூத்து கிராமத்தில் ஒரு கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸாா், சம்பந்தப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில் பான் மசாலை, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளா் ஜெகதீசன்(74), அவருக்கு குட்கா பொருள்களை விற்பனைக்கு வழங்கிய பரங்குன்றாபுரத்தைச் சோ்ந்த ராஜன்(54) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story