பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய இருவர் கைது

பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய இருவர் கைது

கைதானவர்கள்

கிருங்காங்கோட்டை பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கிருங்காங்கோட்டை அருகே உள்ள ஸ்ரீ சித்ரா ஆட்டோ மொபைல்ஸ் என்ற பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.

கடந்த 23.12.2023ம் தேதி இரவு 11.20 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் முகத்தில் துணி கட்டிக் கொண்டு மேற்படி பெட்ரோல் பங்கை வாள் மற்றும் அருவாளைக் கொண்டு பெட்ரோல் நிரப்பும் பம்ப் மற்றும் கண்ணாடி ரூம் ஆகியவற்றை உடைத்து விட்டு சென்றனர்.

இதில் கண்ணாடி நொறுங்கி கீழே விழுந்ததில் அங்கு வேலை பார்க்கும் மேலமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மானாமதுரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூரைச்சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகன் காளீஸ்வரன் என்பவர் கடந்த 24.12.2023ம் தேதி கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், மானாமதுரை காவல் ஆய்வாளர் முத்துக்கணேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர் பூபதிராஜா ஆகியோர் தலைமையில் பூக்குளம் விளக்கு அருகே வாகனத்தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அங்கு சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தனது திருப்பி தப்பிச்செல்ல முயன்ற போது அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் இருவரின் இடது கால்களிலும் முறிவு ஏற்பட்டு மனாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்

. பிறகு விசாரணையில், முருகப் பாஞ்சான் கிராமத்தைச்சேர்ந்த மாணிக்கவேல் மகன் வேல்முருகன்(21) மற்றும் ராஜேந்திரன் மகன் சக்திபிரியன்(20) ஆகிய இருவரும் மேற்படி சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையிலடைக்கப்பட்டனர்.

Tags

Next Story