நெல்லையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

நெல்லையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா கடத்திய இருவரையும் போலிசார் கைது செய்து 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று மாலை பாளையங்கோட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் முகேஷ் (20), மாடசாமி (20) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story