ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது; 1 டன் அரிசி பறிமுதல்
![ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது; 1 டன் அரிசி பறிமுதல் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது; 1 டன் அரிசி பறிமுதல்](https://king24x7.com/h-upload/2023/12/06/320457-image3a1001169111.webp)
தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது; 1 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் 06/12/2023, ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது . 1 டன் அரிசி பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு, பாலக்கோடு பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் பாலக்கோடு - காவேரிப்பட்டிணம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். எலுமிச்சனஹள்ளி பேருந்து நிறுத்தம் அருகே காவேரிப்பட்டணத்திலிருந்து வந்த பிக்கப் மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 21 மூட்டைகளில் 1 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
வாகனத்தில் இருந்த நபர்களை பிடித்து விசாரித்ததில் காரிமங்கலத்தை சேர்ந்த அணீஸ்ரஹ்மான் (வயது .26) மற்றும் காரிமங்கலம் அடுத்த முக்குளத்தை சேர்ந்த கணேசன் (வயது.30) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தர்மபுரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய காரிமங்கலம் பகுதியை சேர்ந்த பிலால் உள்ளிட்ட பிற நபர்களை தேடிவருகின்றனர். ..