டூ - வீலரில் மணல் கடத்திய இருவர் கைது

டூ - வீலரில் மணல் கடத்திய இருவர் கைது

பைல் படம்

திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கலைஞர்புரம் பகுதியில் டூ - வீலரில் மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கலைஞர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 32, மற்றும் குணசீலன், 41. இருவரும் நேற்று காலை பல்சர் மற்றும் ஹீரோ ஹோண்டா பேஷன் டூ-வீலர் வாயிலாக எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் மணல் கடத்துவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சாரதி தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது இருவரும், டூ - வீலரில் கோணிப்பையில் மணல் கடத்திக்கொண்டு மணவூர் நோக்கி வந்தனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு கோணிப்பையில் ஆற்று மணல் மற்றும் டூ-வீலரை பறிமுதல் செய்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story