ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது

 ஸ்ரீபெரும்புதூர் அருகே டாடா மேஜிக் வாகனத்தில் ஆடு திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே டாடா மேஜிக் வாகனத்தில் ஆடு திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, திருமங்கையாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார், 49. இவர், சொந்தமாக 20 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். நேற்று காலை, விவேகானந்தா பள்ளி அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, 'டாடா மேஜிக்' வாகனத்தில் வந்த இருவர், அங்கு மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து தப்பினர். இதை கண்ட ஆட்டின் உரிமையாளர் கூச்சலிட, அவ்வழியாக வந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பைக்கில் பின் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி அருகே மடக்கி பிடித்தனர்.

பின், இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தவகல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள் பாப்பரம்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன், 53, ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த ஆகாஷ், 23, என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்."

Tags

Next Story