நண்பன் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

நண்பன் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பேரளத்தில் நண்பன் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். 

பேரளத்தில் நண்பன் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
பேரளம் காவல் நிலைய சரகம் நல்லிச்சேரி மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் ஹரிபிரசாத் என்பவரின் மகன் அஸ்வந்த் பிரசாத்தை நட்பு ரீதியாக பார்க்க வருவது போல் அடிக்கடி அஸ்வந்த் பிரசாத் வீட்டிற்கு வந்து அவர் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய பேரளம் ,வாய்க்கால் கரை ரோட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மாதவன் வயது 23 மற்றும் பேரளம் மேலமாங்குடி, மேலத்தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அன்புமணி வயது 22 ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடிய நகைகள் பவுன் நெக்லஸ்- 12 கிராம் ,மோதிரம்- 3 கிராம், தோடு- ஜிமிக்கி -ஒரு ஜோடி, வெள்ளி கொலுசு 41 கிராம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story