திருவள்ளூர் அருகே டூ - வீலர் திருடிய இருவர் கைது

திருவள்ளூர் அருகே டூ - வீலர் திருடிய இருவர் கைது

கைது 

திருவள்ளூர் அருகே டூ - வீலர் திருடிய இருவர் கைது செயப்பட்டு சிறையில் அடைத்தனர்.
திருவாலங்காடு, வீரகோவிலைச் சேர்ந்த பாலமுருகன், 34, நண்பர் தினகரன் என்பவருடன் போளிவாக்கத்தில் உள்ள தனியார் கிடங்கில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி இரவு பணி முடிந்து, 'பஜாஜ் பாக்சர்' இரு சக்கர வாகனத்தில், நண்பர் தினகரனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, கம்மவார்பாளையம் பகுதியில் உள்ள விஜயகாந்த் தனியார் செங்கல்சூளை அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள், இவர்களை தாக்கி, இருசக்கர வாகனம் மற்றும் இருவரது மொபைல்போனையும் பறித்து சென்றனர். இதுகுறித்து, நேற்று முன்தினம் பாலமுருகன் கொடுத்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். போளிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 20, ரோகித், 26, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், இருசக்கர வாகனம் மற்றும் இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அதன்பின், இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story