ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவர் கைது

ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவர் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்தி கள்ள சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது,1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

டிஎஸ்பி.ஜெகதீசன் மேற்பார்வையில், ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் பேகம்பூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேகம்பூர் பகவதி அம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த அமீர்அம்ஜா(23), தமிமுல் அன்சாரி(25) ஆகிய 2 பேர் ரேஷன் அரிசியை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்வதற்கா பதுக்கி வைத்திருந்தனர்.

இதில் 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story