போலி லாட்டரி வழக்கில் இருவர்  கைது

போலி லாட்டரி வழக்கில்  இருவர்  கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி வழக்கில் இருவர்  கைது செய்யப்பட்டனர்.  


குமாரபாளையத்தில் போலி லாட்டரி வழக்கில் இருவர்  கைது செய்யப்பட்டனர்.   

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று குமாரபாளையம் அருகே கோட்டைமேடு, ஆலாங்காட்டுவலசு பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேரில் சென்ற போலீசார் போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 39, பாபு, 48, ஆகிய இருவரை கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து, நெம்பர்கள் எழுதப்பட்ட ஏழு துண்டு சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story