இரண்டு கோடி மோசடி செய்தவர் கைது

இரண்டு கோடி மோசடி செய்தவர் கைது

கைது

திருப்பூரில் இருந்து ரூ.2 கோடி லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த நபரை திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி ( 62 ), கடந்த ஆண்டு மே மாதம் பல்லடம் வேலப்பன்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் (53) என்பவர் அறிமுகமாகி 2 கோடி ரூபாய் லோன் பெற்று தருவதாக கூறி ரத்தினசாமியின் நில ஆவணம் மற்றும் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பனம் பெற்றுள்ளார் ஆனால் கூறியபடி லோன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இது குறித்து ரத்தினசாமி அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து விசாரித்தபோது இதுபோன்ற பலரிடமும் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இல்ரத்தினசாமி திருப்பூர் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தென்காசியில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story