விருத்தாசலம் பகுதியில் இரண்டு நாட்கள் மின்தடை

விருத்தாசலம் பகுதியில் இரண்டு நாட்கள் மின்தடை

மின் தடை

விருத்தாசலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு நாட்கள் மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளார் அறிவித்துள்ளார்.
விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 230 கே. வி. டவர் லைன் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மற்றும் நாளை (சனிக்கி ழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின் வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story