திருவள்ளூர் அருகே இரு முதியவர் உடல்கள் மீட்பு

திருவள்ளூர் அருகே இரு முதியவர் உடல்கள் மீட்பு

கோப்பு படம் 

திருவள்ளூர் அருகே இரு முதியவர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நேற்று முன்தினம், ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வி.ஏ.ஓ.வுக்கு பகுதிவாசிகள் தகவல் அளித்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., தேவராஜ் கொடுத்த புகார்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த ஆண் நபருக்கு 55 வயதிருக்கும். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் கிராமத்தில் ஓடை தரைப்பாலம் அருகே, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு அப்பகுதிவாசிகள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்த நபர் திருவாலங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தை சேர்ந்த கருணாகரன், 63, என்பது தெரிந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story