இரண்டு போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி பகுதியில் மருத்துவமனைகள் நடத்தி வந்த சாணார்பட்டி சேர்ந்த துரைப்பாண்டி(67), மலைச்சாமி(62) ஆகிய 2 பேரின் மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் .

அப்போது 10ம் வகுப்பு மட்டுமே படித்த துரைப்பாண்டி மருந்து, மாத்திரை கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதேபோல் மலைச்சாமி முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்தனர் . அங்கிருந்து மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து துரைப்பாண்டி, மலைச்சாமி இருவரையும் சாணார்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story